SHUSI Banana Leaf Restaurant

SHUSI Banana Leaf Restaurant AUTHENTIC SOUTH INDIAN FOOD

SHUSI SPECIAL
31/03/2024

SHUSI SPECIAL

24/12/2022
கரோனாவும் சித்த மருத்துவமும்: தொற்றிலிருந்து மீண்டவரின் அனுபவம்மே மாதம் 10ஆம் தேதி எனக்கு வித்தியாசமான ஒரு பொழுதாக விடிந...
26/06/2021

கரோனாவும் சித்த மருத்துவமும்: தொற்றிலிருந்து மீண்டவரின் அனுபவம்

மே மாதம் 10ஆம் தேதி எனக்கு வித்தியாசமான ஒரு பொழுதாக விடிந்தது. எனது உடல்நிலை இயல்பு நிலையில் இல்லை என்று தோன்றியது.
கரோனா?
வாய்ப்பில்லையே... வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. அப்படியே அரிதாக செல்ல நேர்ந்தாலும் முகக்கவசம் இல்லாமல் சென்றதில்லை. வீட்டுக்கு வந்ததும் கைகளைக் கழுவாமல் இருந்ததில்லை. பிறகு எப்படி?
அதுமட்டும் அல்ல. கரோனாவுக்கு உண்டான அறிகுறிகள் எதுவும் இல்லை. காய்ச்சல் இல்லை. தலைவலி இல்லை. உடல் வலி இல்லை. சளித் தொல்லை இல்லை. இருமல் இல்லை.
நாவில் சுவை உணர்வும் இல்லை! வாய் கசந்தது. உணவும் கசந்தது. அடுத்த இரண்டு மூன்று நாட்கள் சரியான சாப்பாடு இல்லாததால் உடல் பலவீனமானது.
எனவே, அரைகுறை மனதோடு, எதற்கும் ஒரு முறை பரிசோதனை செய்துவிடலாமே என்று ஒரு தனியார் நிறுவனத்துக்கு போன் செய்தேன். மறுநாள் ஊழியர் ஒருவர் வந்தார். ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்தார்.
மறுநாள் வந்த பரிசோதனை முடிவு, என்னை கரோனா நோயாளி என்றது!
நம்ப முடியாத முடிவு. ஆனாலும் நம்பியே ஆகவேண்டிய முடிவு.
அடுத்த நாள் அடையாற்றில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றேன். சிடி ஸ்கேன் வேண்டும் என்றார்கள். நுரையீரலில் கொஞ்சம் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. மருந்து மாத்திரைகள் தந்தார்கள். அவற்றில் ஸ்டீராய்டு மருந்தும் அடங்கும். இங்கு ஸ்டீராய்டு பற்றிச் சொல்லியாக வேண்டும்.
நோயின் தீவிரத்தைத் தற்காலிகமாக மட்டுப்படுத்துவதற்கான மருந்தே ஸ்டீராய்டு. இன்னும் சொல்வதானால், ஸ்டீராய்டு நோயை குணமாக்கும் மருந்து அல்ல. நோயை மறைக்கும் மருந்து. நோய்க்குத் தற்காலிக நிவாரணம் தந்து நிரந்தரமாகப் பல நோய்களை உடம்பில் விதைக்கிற மருந்து!
இனி விஷயத்துக்கு வருவோம்.
கூடவே ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்கள். உடம்பிலிருந்து ரத்தம் உறிஞ்சப்பட்டது. பரிசோதனை முடிவில் ரத்தத்தில் கொஞ்சம் கோளாறு இருப்பதாகச் சொன்னார்கள். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்யவேண்டும் என்றார்கள். மீண்டும் உடம்பிலிருந்து ரத்தம் உறிஞ்சப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு டாக்டர் என்னை அழைத்துப் பேசினார்.
"சார், உங்களுக்கு இப்போது வயது 66க்கு மேல் ஆகிறது. கூடவே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களும் இருக்கின்றன. கரோனாவின் தாக்கம் உங்கள் உடலில் குறைந்ததாகத் தெரியவில்லை. நாளை என்ன நடக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம். நாளை ஒருவேளை இந்த நோய் குணமாகலாம். இல்லையென்றால் உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். எனவே எதற்கும் நீங்கள் ஒரு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவது நல்லது" என்று அவர் பேசப்பேச, என் காதுகள் அடைத்தன. கண்கள் இருண்டன. அதிர்ந்து போய் நின்றேன். அப்படி ஒரு மனநிலை இதுவரை என் வாழ்க்கையில் ஏற்பட்டதில்லை. கரோனா என்ற நோய் என் உயிர்மூச்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதாய் உணர்ந்தேன். மனதில் ஏதேதோ எண்ணங்கள்! முகநூலில் நண்பர்களின் அஞ்சலி... உறவுகளின் அழுகை... என்று நினைக்கக் கூடாத நினைவுகள் எல்லாம் மனதை ஆக்கிரமித்தன!
சென்னை நகரை இறுதியாக ஒரு முறை பார்க்கிறோமோ என்ற மனநிலையில் வீட்டுக்கு வந்தேன்.
எதிர்மறை எண்ணங்களை விதைக்கிற இடத்தில் மீண்டும் சிகிச்சையைத் தொடர என் மனது இடம் தரவில்லை.
ஊடகத்தில் பணிபுரியும் அன்புத் தம்பி ஒருவரிடம் நிலைமையைச் சொன்னேன்.
"சார், எதற்கும் கலங்காதீர்கள். பயத்தை அறவே ஒதுக்கி வையுங்கள். கிண்டியில் ஒரு சித்தா கோவிட் சிகிச்சை மையம் இருக்கிறது. நாளை காலையே நீங்கள் அங்கு செல்லுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்" என்று நம்பிக்கை தந்தார்.
மறுநாள் அரைகுறை மனதோடு கிண்டி ஜெயின் கல்லூரி வளாகத்தில் உள்ள சித்தா சிகிச்சை மையத்துக்குச் சென்று தலைமை மருத்துவர் சதீஷ்குமாரைச் சந்தித்தேன். எனது பரிசோதனை முடிவுகளை வாங்கிப் பார்த்தவர் உடனடியாக சில மருந்துகளைக் கொடுக்கச் சொன்னார். சிகிச்சை முகாமில் நான் அனுமதிக்கப்பட்டேன்.
ஆம்புலன்ஸ் அலறல்கள் இல்லை! உறவினர்களின் அழுகுரல்கள் இல்லை! மருத்துவமனைகளுக்கே உரிய நெடி இல்லை! அது கரோனா சிகிச்சை முகாம் என்று அடித்துச் சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு அமைதியான, சுத்தமான இடம்!
அதற்குக் காரணம் இருக்கிறது. ஜெயின் கல்லூரியின் அறக்கட்டளையினர், குழந்தைகளுக்கான சில வகுப்பறைகளைத் தற்காலிக கரோனா வார்டுகளாக மாற்றுவதற்கு அனுமதி தந்திருக்கிறார்கள். மாநில அரசு அவற்றை மருத்துவமனையாகப் பயன்படுத்திக் கொள்கிறது. அதனால்தான் அப்படி ஒரு சுத்தம். மருத்துவமனையாக மாற்றப்பட்ட பிறகும் அந்த சுத்தம் தொடர்ந்தது பேணப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு.
முதல் நாள் காலை ஆறரை மணிக்கெல்லாம் வளாகத்தில் உள்ள பூங்காவில் நோயாளிகள் அனைவரும் கூடவேண்டும் என்று அழைப்பு. இதமான தென்றல், இளவெயில் என்னும் இயற்கைச் சூழலில் யோகா பயிற்சிகள் தொடங்குகின்றன. பயிற்சியாளர் ஒருவர் பலதரப்பட்ட மூச்சுப் பயிற்சிகளையும் யோகாசனங்களையும் கற்றுத் தருகிறார். அதுவரை அப்படி வளைந்தும் நெளிந்தும் அனுபவப்படாத உடல் கொஞ்சம் சிரமப் படுகிறது. நாட்கள் செல்லச் செல்ல உடம்பு அதற்கேற்றவாறு பழகி விடுகிறது.
பயிற்சி முடிந்த கையோடு ஒரு கசாயம். தொடர்ந்து காலை உணவு, மருந்து, மாத்திரை, மதிய உணவு, மருந்து, இரவு உணவு, மருந்து என்று ஒவ்வொரு நாளும் முடிகிறது.
மாலை வேளைகளில் காலார நடைப்பயிற்சி செய்யலாம். பூங்காவில் அமர்ந்து காற்று வாங்கலாம். போதாக் குறைக்கு மனதை வருடும் இசை வேறு!
ஒவ்வொருவருமே ஒரு புது மனிதனாக மாறியதைப்போல் உணர்கிறார்கள். ஆக்சிஜன் முகக்கவசம் அணிந்து சுவாசிப்பவர்கள்கூட இரண்டொரு நாட்களிலேயே இயல்பு நிலைக்குத் திரும்பி விடுகிறார்கள்!
மூச்சுக்குழாயைத் துடைத்து சுத்தம் செய்துவிட்டது போன்ற உணர்வு! உடலில் புது ரத்தம் சுரந்தது போன்ற ஓர் அனுபவம்!
நாட்கள் செல்லச் செல்ல உடம்பில் இருந்த நோயும் மனதில் இருந்த அச்ச உணர்வும் முற்றாக அற்றுப் போகிறது! ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கும் உற்சாகம் மனதில் ஒட்டிக் கொள்கிறது! பத்தே நாட்களில் எல்லா நோயாளிகளும் புது மனிதர்களாக வீடு திரும்புகிறார்கள்!
நானும்தான்!
இந்த மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது?
எல்லோரது மனதிலும் எழும் இந்த வினாவுக்குத் தலைமை மருத்துவர் சதீஷ்குமார் விடை சொன்னார்.
"சித்த மருத்துவம் என்பது வெறும் வைத்திய முறை அல்ல. பண்டைத் தமிழர்களின் வாழ்வியல் முறை. வழிவழியாக வந்த இந்தப் பாரம்பரிய மருந்துகள் எந்தப் பக்க விளைவும் ஏற்படுத்தாதவை. நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செய்யும் வல்லமை கொண்டவை. இங்கே நோயாளிகளுக்கு வழங்கப்படும் நெல்லிக்காய் லேகியம், அமுக்கரா சூரணம், தாளிசாதி வடகம், மரமஞ்சள், லவங்காதி சூரணம், நிலவேம்புக் குடிநீர், கபசுரக் குடிநீர், ஆடாதொடை மணபாகு, உரை மாத்திரை போன்ற மருந்துகள் கரோனா நோயை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றவை. உடலில் நோய் எதிர்ப்பாற்றலைத் தூண்ட வல்லவை. கரோனாவின் மூன்றாவது அலை வரும் என்றும் அது குழந்தைகளைக் குறிவைத்து தாக்கும் என்றும் பரவலாகப் பேசப்படுகிறது.
எத்தனை அலைகள் வந்தாலும் அவற்றிலிருந்து குழந்தைகளைக் காக்கும் அற்புதமான உரை மாத்திரை, பூண்டு தேன், கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, அதிமதுர சூரணம் போன்ற மருந்துகள் சித்த மருத்துவத்தில் உண்டு" என்று நம்பிக்கை பொங்கப் பேசுகிறார் மருத்துவர் சதீஷ்குமார்.
என்னைக் காத்த சித்த மருத்துவம் இந்த உலகையும் காக்க வல்லது!
கனி இருப்பக் காய் கவர்தல் இனியும் வேண்டுமா?
- எம்.ஜே.ரெகோ
மூத்த ஊடகவியலாளர்.
நன்றி: இந்து தமிழ் திசை

கொரோனா தொற்றுக்கு குணமளிக்கும் சித்த மருத்துவம்! மற்றும் குறுமிளகு ரசம். (எங்கள் சுசி உணவகத்தில் இந்த குறுமிளகு ரசம் கிட...
22/06/2021

கொரோனா தொற்றுக்கு குணமளிக்கும் சித்த மருத்துவம்! மற்றும் குறுமிளகு ரசம். (எங்கள் சுசி உணவகத்தில் இந்த குறுமிளகு ரசம் கிடைக்கும்)

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பின் உணவு மற்றும் சில பயிற்சிகள் மூலம் எப்படி இயல்பு நிலைக்கு வருவது எனக் கூறுகிறார், சித்த மருத்துவர் அருள் அமுதன்: கொரோனாவி லிருந்து மீண்ட பிறகும் உடல் சோர்வு, பயம், பதற்றம், தலைச்சுற்றல், நரம்பு மண்டலம் பாதிப்பு, சிந்தனைத்திறன் குறைவு போன்ற பல பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.உணவு முறை மாற்றம் மற்றும் சில பயிற்சிகள் மூலம் இதை சரிசெய்ய முடியும். சித்த மருத்துவம் மூலம் பாதிப்படைந்த உடல் உறுப்புகளை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.

இந்த சிகிச்சை முறைக்கு, காயகல்பம் என்று பெயர். கொரோனாவுக்கு பிந்தைய காலங்களில் பாதிப்படைந்துள்ள நரம்பு மண்டலத்தை சீர்செய்ய வல்லாரை தான் மிகச் சிறந்த மருந்து. வல்லாரையை துவையல், சட்னியாக செய்து, தினமும் ஒரு வேளை என சாப்பிட்டு வர, இந்த பிரச்னை படிப்படியாக குறையும். வெறும் வல்லாரை இலையை சாப்பிடலாம் என கருதுபவர்கள், மூன்று இலைகளை மட்டுமே சாப்பிட வேண்டும்; அதிகமாக சாப்பிட்டால் வேறு பிரச்னைகள் ஏற்படும்.நுரையீரல் தொடர்பான பிரச்னைகளை சீர்செய்ய, பிராணாயாமம் என்ற மூச்சு பயிற்சி உதவும்.
மேலும், நுரையீரலில் சேர்ந்துள்ள பாதிப்பு களை சரிப்படுத்த துளசி, கற்பூரவல்லி, ஆடாதொடை, அதிமதுரம், துாதுவளை, நொச்சி ஆகியவற்றை கொதிக்க வைத்து, ஆவி பிடிக்கலாம்.துாதுவளை லேகியம் மற்றும் திப்பிலி ரசாயனத்தை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி உட்கொள்ளலாம். சோர்வு மற்றும் உடல் வலியை போக்க, முடக்கத்தான் கீரையை பயன்படுத்த வேண்டும். இதை தோசையாகவும் செய்து சாப்பிடலாம். மேலும், வைட்டமின் - டி கிடைக்க, காலையிலும், மாலையிலும் சூரிய ஒளியில் சிறிது நேரம் நடமாட வேண்டும். பால், முட்டை ஆகியவற்றுடன், 'ஒமேகா - 3' ஆயில் உள்ள மீன் உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.உடல் வலி அதிகமாக இருந்தால் சிவப்பு குக்கில் தைலம் அல்லது கற்பூராதி தைலத்தை தடவினால், நல்ல குணம் கிடைக்கும்.சிலருக்கு இதயம் படபடப்பு அதிகமாக இருக்கும். அத்தகைய வர்களுக்கு முசுமுசுக்கை தான் கண்கண்ட மருந்து. படபடப்பு அதிகமாக இருக்கும் நேரத்தில் மல்லி, சீரகத்தை கஷாயமாக காய்ச்சி குடிக்கலாம்.மேலும் முசுமுசுக்கை தோசை சாப்பிடுவதன் மூலமும், முசுமுசுக்கை சூப் அருந்துவதன் மூலமும், சில நிமிடங்கள் தொடர்ந்து பிராணாயாமம் செய்வதன் மூலமும் படபடப்பிலிருந்து மீளலாம்.

முக்கியமாக வாதம், பித்தம், கபம் என மூன்றையும் சமநிலைப்படுத்த குறுமிளகு, மஞ்சள், சோம்பு, சுக்கு, பெருங்காயம், ஏலம், வெந்தயம், பூண்டு என, எட்டு பொருட்களை அரைத்து ரசம் செய்து குடிக்க வேண்டும்!

நன்றி தினமலர்
குறிப்பு : எங்கள் சுசி உணவகத்தில் இந்த குறுமிளகு ரசம் கிடைக்கும்

12/02/2021

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியவை... கூடாதவை!

இனிப்பு மற்றும் பாலீஷ் செய்யப்பட்ட தானியங்களை அதிகமாகப் பயன்படுத்துவது, உணவுப் பண்பாட்டில் நடக்கும் ஒழுங்கின்மை, மன அழுத்தம், உடல் உழைப்பு குறைவது இவைதான் சர்க்கரைநோய் வருவதற்கு இன்றைக்கு முக்கிய காரணங்கள்.
சர்க்கரை நோயாளிகள் எதைச் சாப்பிடுவது நல்லது, எதைத் தவிர்க்கலாம்... தெரிந்துகொள்வோமா?
சர்க்கரைநோய்க்கு அரிசி எதிரி என்பது உண்மையல்ல. இயற்கையான முறையில் விளைந்த பாரம்பர்ய கைக்குத்தல் அரிசி ரகங்கள் பெரும்பாலும் லோ கிளைசமிக் தன்மை உடையவை. வேகமாக ரத்தத்தில் சர்க்கரையைச் சேர்க்காதவை. கூடுதலாகக் கிடைக்கும் நார்ப் பொருளும், தவிட்டில் உள்ள �`ஒரைசினால்�' எனும் ஆன்டிஆக்சிடன்ட்களும் சர்க்கரைநோய்க்கு நல்ல பயன் தருபவை. விஷயம் நாம் சாப்பிடும் அளவில்தான் இருக்கிறது. அதிக உடல் உழைப்பு இல்லாமல், ஏசி காரில் போய், நாள் முழுக்க நாற்காலியில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு அரிசி சோற்றின் அளவு குறைவாக இருப்பதுதான் நல்லது.
* இன்றைக்குப் பெரும்பாலும் அரிசியும் கோதுமையும் பாலீஷ் செய்யப்பட்டுதான் விற்பனை செய்யப்படுகின்றன. வெளியிடங்களில் அரிசி உணவுதான் கிடைக்கிறது என்றால், அத்துடன் கீரை, காய்கறிகளைச் சேர்த்து, நன்கு பிசைந்து, மெதுவாக மென்று சாப்பிடுங்கள். சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகத்தை கீரையின் நார்கள் மெதுவாக ஆக்கிவிடும்.
* தரைக்கு அடியில் விளையும் கிழங்குகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, உருளைக்கிழங்கை! கேரட்டும் பீட்ரூட்டும் வேண்டவே வேண்டாம்.
* கோவைக்காய், கத்திரிக்காய், அவரைப்பிஞ்சு, வாழைப்பூ, சுண்டை வற்றல், முருங்கைக்கீரை, கொத்தமல்லி, புதினா... இவை சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலன் அளிக்கக்கூடியவை. பாகற்காயும் வெந்தயமும் சர்க்கரைநோய் கட்டுப்பட உதவுபவை.
* நாருள்ள, இனிப்பு குறைவாகவும் துவர்ப்பு அதிகமாகவும் உள்ள பழங்களை தினமும் சாப்பிட வேண்டியது அவசியம். மாம்பழம், சப்போட்டா, மோரீஸ் வாழைப்பழம்... இன்னும் ஹைபிரிட் வாழை தவிர, மற்ற பழங்களை மருத்துவர் அறிவுரைப்படி, பிற உணவு இல்லாதபோது மாலை வேளைகளில் சாப்பிடலாம்.
* தோலுடன் கூடிய ஆப்பிள், துவர்ப்புச் சுவையில் இளம்பழுப்பு நிறத்தில் உள்ள கொய்யா, நாவற்பழம், துவர்ப்புள்ள மாதுளை நல்லது.
* பால், இனிப்பு சேர்க்காத கிரீன் டீ அருந்துவதுதான் நல்லது. பாலுக்கு பதில் மோர் சாப்பிடலாம்.
* காலையில் முருங்கைக்கீரை வெங்காயம் சேர்த்த சூப் அல்லது கொத்தமல்லி, வெந்தயம் சேர்த்த குடிநீரை அருந்தலாம். வெட்டி வேர் போட்ட பானை நீரும், சீரகத் தண்ணீரும் தினசரி உபயோகத்துக்கு நல்லது.
* மதிய உணவுக்கு... வாரத்துக்கு இரண்டு நாள் அரிசி சோறு, இரண்டு நாள் தினை அரிசி சோறு, இரண்டு நாள் வரகரிசி சோறு, ஒரு நாள் மாப்பிள்ளை சம்பா அவலில் செய்த உணவு நல்லது.
* இரவு உணவு... தினை ரவா உப்புமா, கேழ்வரகு அடை ஆகியவற்றை பாசிப் பயறு கூட்டுடன் சாப்பிடலாம்.
* காலை உணவு.. `பஜ்ரா ரொட்டி�’ எனப்படும் கம்பு அடை, சிவப்பரிசி அவல் உப்புமா, கைக்குத்தல் அரிசிப் பொங்கல் என அளவாகச் சாப்பிடலாம். காலை உணவாக நம்ம ஊர் நவதானியத்தில் அல்லது சிறுதானியங்களில் செய்த உப்புமா, அடை சிறந்தவை. கஞ்சியாக செய்து குடிக்க வேண்டாம். கஞ்சி என்றால் சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகம் அதிகமாகிவிடும். அதை மட்டும் தவிர்க்கவும்.

தர்பூசணி பழம்தர்பூசணி பழத்தின் மருத்துவ நன்மைகள்: 1.)தர்பூசணி  ஜுசை கர்ப்ப காலத்தில் பெண்கள் குடித்தால் அவர்களுக்கு உடல்...
14/02/2019

தர்பூசணி பழம்

தர்பூசணி பழத்தின் மருத்துவ நன்மைகள்:

1.)தர்பூசணி ஜுசை கர்ப்ப காலத்தில் பெண்கள் குடித்தால் அவர்களுக்கு உடல் ஆரோக்கியமாகும், குழந்தை வளர்ச்சிக்கு ஏற்றதாகவும் இருக்கும்.

2.)கண் அழுத்த நோய், மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு கண் குறைபாடு குணமாகும்.

3.)முடி கொட்டுதல் தொல்லையில் அவதிப்பட்டு வருபவர்களுக்கு முடி வளர்ச்சி ஏற்படும்.

4.)நெஞ்செரிச்சலாக இருக்கும் நேரத்தில் ஒரு தர்பூசணியை நறுக்கி, அதில் நான்கு அல்லது ஐந்து சிறு துண்டுகளைச் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கிவிடும்.

5.)இதில் நார் சத்துக்குள் மற்றும் தண்ணீர் அளவு அதிகமாக உள்ளதால் மலச்சிக்கலுக்கு மருந்தாகிறது.

6.)இதில் உள்ள பிளவனாய்டு, கரோட்டினாய்டு நிறமிகளால் கட்டி, வீக்கம் போன்றவை குணமாகும்.

7.) இதில் உள்ள லைகோபீன் பெருங்குடல், நுரையீரல் போன்ற இடங்களில் புற்றுநோயை ஏற்படுவதை தடுக்க உதவியாக இருக்கும்.

புற்றுநோயைத் தடுக்கும் பூண்டு! எந்த வயதில் மூளை நினைவுத்திறனில் குறைபாடு ஏற்படத் தொடங்குகிறது?45 வயதில் அறிதிறன் குறையத்...
13/02/2019

புற்றுநோயைத் தடுக்கும் பூண்டு!

எந்த வயதில் மூளை நினைவுத்திறனில் குறைபாடு ஏற்படத் தொடங்குகிறது?

45 வயதில் அறிதிறன் குறையத் தொடங்குவதாக ஓர் ஆய்வு கூறுகிறது.

துத்தநாகச் சத்து அதிகம் கொண்ட உணவுப் பொருள் எது?

கடல் சிப்பி உணவில் அதிக துத்தநாகச் சத்து உள்ளது. ஹார்மோன்களின் ஆரோக்கியமான உற்பத்தி, இதய ஆரோக்கியம், ஆற்றல் மேம்பாடு ஆகியவற்றை துத்தநாகம் ஊக்குவிக்கக் கூடியது.

புற்றுநோயைத் தடுக்கும் உணவு வகைகள் இருக்கின்றனவா?

மஞ்சள், வெள்ளைப் பூண்டு, தக்காளி, க்ரீன் டீ, புரக்கோலி, மீன், குளிர் நீர் மீன்கள், பழங்கள் ஆகியவை புற்றுநோயைத் தடுக்கும் திறன் கொண்டவை.

03/02/2019

கருவாட்டுக் குழம்பு!

தேவையான பொருட்கள்:
குச்சிக் (நெத்திலி) கருவாடு நெய்மீன் கருவாடு - 1 துண்டு
சாம்பார் வெங்காயம்
தக்காளி
புளி
மஞ்சள் துாள்
சீரகத் துாள்
மிளகாய் துாள்
பூண்டு
பச்சை மிளகாய்
செக்கு நல்லெண்ணெய்
உப்பு

(அளவு குறிப்பிடாததற்கு காரணம், கருவாடு எந்த அளவோ, அதற்கு ஏற்றாற்போல, மற்ற பொருட்களை கூட்டவோ, குறைக்கவோ செய்து கொள்ளுங்கள்)

செய்முறை
* நெத்திலி மீன் கருவாடை, அதில் ஒட்டியிருக்கும் மணல் போகும் அளவுக்கு நன்கு கழுவ வேண்டும். அதில், தண்ணீர் ஊற்றி, கால் மணி நேரம் ஊற வைக்கவும்.

* புளித் தண்ணீரை கரைத்து, அதில், உரித்த பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி போட்டு, அடுப்பில் வைக்கவும். போதுமான அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும்.

* கொதிக்கும் போதே, மஞ்சள் துாள், மிளகாய்த் துாள், சீரகத் துாள், உப்பு போடவும்.

* கரண்டி போடாமல், சட்டியை எடுத்து, லேசாக சுற்றி விடவும். நன்கு கொதி வந்ததும், பச்சை வாசனை மாறாமல் இருக்கும் போதே, நல்லெண்ணெய் ஊற்றவும்.

* மசாலா நன்கு கொதித்து, லேசான கெட்டி பதத்திற்கு குழம்பு வரும் போது, ஊறப் போட்ட கருவாடை போடவும். கரண்டி போடாமல், சட்டியை பிடித்துமெதுவாக சுற்றினால், கருவாடு உடையாமல் வேகும். இதில் ஒரு துண்டு சுத்தம் செய்த, நெய் மீன் கருவாட்டுத் துண்டையும் போட்டு வேக விடவும். நெய் மீன் போடுவதால், அதில் ஏற்கனவே உப்பு இருக்கும். எனவே, கவனத்துடன் உப்பு சேர்க்கவும்.

* எண்ணெய் பிரிந்து, குழம்பு வாசம் வந்தவுடன் , அடுப்பை அணைத்து விடவும்.

* சாதத்துடன் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும். தவிர, கம்மஞ்சோறு, கேப்பக் கூழ், இட்லி, தோசைக்கு பிரமாதமாக மேட்ச் ஆகும்.

சமையலில் செய்ய கூடாதவை!
31/12/2018

சமையலில் செய்ய கூடாதவை!

30/12/2018

NEW BRANCH : SUNGAI PETANI, KEDAH.

No. 41, Taman Kampian,
Jalan Sekerat,
08000, Sg. Petani,
Kedah DA.

Contact No. +60194719987

தலைமுடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர ...
17/12/2018

தலைமுடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர ...

Address

71A PENANG Street
George Town
10200

Opening Hours

Monday 07:30 - 22:30
Tuesday 07:30 - 22:30
Wednesday 07:30 - 22:30
Thursday 07:30 - 22:30
Friday 07:30 - 22:30
Saturday 07:30 - 22:30
Sunday 07:30 - 22:30

Telephone

+60194739594

Website

Alerts

Be the first to know and let us send you an email when SHUSI Banana Leaf Restaurant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SHUSI Banana Leaf Restaurant:

Share