Sun sign tea

Sun sign tea Tea

24/06/2017
28/12/2016

sunsign tea - sunsigntea sunsigntea.in/ sunsign tea is a register trademark of our company vertex global enterprises ashesam, tamilnadu, India. We are blending and repacking since 2010. sunsign te

good morning....have anice day
28/12/2016

good morning....
have anice day

12/05/2014

Tea

green tea
12/05/2014

green tea

08/05/2014

இந்தியத் தேயிலை[தொகு]
இந்தியாவில் தேயிலைத் தொழில் சுமார் 180 ஆண்டுகள் பழமையானது ஆகும். உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் வாணிகப் பயிர்களில் தேயிலை மிகவும் முக்கியமான ஒன்றாகும். 1830 ஆம் ஆண்டின் பிற்படுதியில் தான் இந்தியாவில் தேயிலையின் வணிக உற்பத்தி ஆரம்பமானது. அதற்கு முன்பு அசாம் காடுகளில் தான் பெரும்பாலும் தேயிலை விளைந்தது. அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை சிவப்பு புவிக்குறியீட்டு எண் பெற்றவையாகும்.

இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் புவியியல் ரீதியான தனித்த பகுதிகள் பிரிக்கப்பட்டுள்லன. தேயிலையின் தரம், மணம், சுவை ஆகியவற்றில் வேறுபட்ட தேயிலை வகைகள் இந்தப் பகுதிகளில் பயிர் செய்யபடுகின்றன. அந்த வகையில் டார்ஜிலிங், அசாம், நீலகிரி ஆகியவை தேயிலை விளையும் சிறப்பு பூகோளப் பகுதியாகும்.

இமயமலையின் பனி படர்ந்த அடிவாரத்தில் பயிர் செய்யப்படுபவை டார்ஜிலிங் தேயிலையாகும். இப்பகுதிக்கே உரிய அதிக குளிர், ஈரப்பதமான பருவநிலை, மழையளவு, மண்வளம் மற்றும் மலைச் சரிவுகளின் சாகுபடி ஆகிய தன்மைகளால் டார்ஜிலிங் தேயிலை சிறப்பு சுவை கொண்ட தனித் தன்மையைப் பெற்றுள்ளது. இந்த வகைத் தேயிலை உலகில் வேறெங்கும் பயிரிடப்படுவதில்லை என்பது இதன் தனிச் சிறப்பாகும். டார்ஜிலிங் தேயிலையைப் போலவே அசாம் தேயிலையும் உலகப் புகழ் வாய்ந்தது. அசாமில் விளையும் தேயிலை மிகவும் சுவையான பளிச்சென்ற நிறம் கொண்ட தேநீரைத் தரும் தேயிலையாகும். தமிழ் நாட்டில் நீலகிரி மலைப் பகுதியின் சரிவான நிலப்பகுதிகளில் பயிராகும் தேயிலை மிகவும் சுவை கொண்டதாகும். அதிகபட்ச தேநீர் சுவையை விரும்புவோர் நீலகிரித் தேயிலையைத் தேர்வு செய்வர். இந்தியாவில் உற்பத்தியாகும் தேயிலை ருஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், இலங்கை, போலந்து, ஜெர்மனி, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

08/05/2014

தேநீர் அருந்துவது 4000 வருடங்களுக்கு முன்பே சீனாவில் தோன்றிவிட்டது.[13] பசும் தேநீர் பானமாகவும் பாரம்பரிய மருத்துவ முறையாகவும் சீனா, ஜப்பான், வியட்நாம், கொரியா, இந்தியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பெரும்பாலான ஆசியாவில் இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்துவது மற்றும் உடல் வெப்பநிலை, இரத்த சர்க்கரையை முறைப்படுத்துவதற்கான காயம் ஆற்றுவது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவது ஆகியவற்றிற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

1191 ஆம் ஆண்டில் ஈசாய் என்ற ஜென் துறவியால் எழுதப்பட்ட கிஸா யஜோகி (தேநீர் புத்தகம் ) இதயம் உள்ளிட்ட ஐந்து முக்கிய உறுப்புகளுக்கு பசும் தேநீர் அருந்துவது எந்த வகையில் பயன்மிக்கதாக இருக்கிறது என்பதை விவரிக்கிறது. இந்தப் புத்தகம் தேநீரின் மருத்துவ குணவியல்புகள் குறித்து விவாதிக்கிறது, இது சாராயச் சத்தின் விளைவைத் தணிப்பது, ஊக்கியாக செயல்படுவது, மோசமான செயல்திறனை குணப்படுத்துவது, தாகம் தணிப்பது, செரிமானமின்மையை நீக்குவது, பெரிபெரி நோயை குணப்படுத்துவது, வெளிறிப்போவதைத் தடுப்பது மற்றும் சிறுநீரக மற்றும் மூளைச் செயல்பாட்டை மேம்படுத்துவது ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது. பகுதி ஒன்று தேயிலையின் வடிவங்கள், தேயிலைப் பூக்கள் மற்றும் தேயிலைகள் ஆகியவற்றை விளக்கியிருப்பதோடு தேயிலைச் செடியை வளர்ப்பது மற்றும் தேயிலைகளை நிகழ்முறைப்படுத்துவது ஆகியவற்றையும் உள்ளிட்டிருக்கிறது. பகுதி இரண்டில், இந்தப் புத்தகம் தனி நபர் உடல் குணப்படுத்தல்களுக்குத் தேவைப்படும் திட்டவட்டமான மருந்தளவு குறித்து விவாதிக்கிறது.

Address

Mannargudi
614001

Alerts

Be the first to know and let us send you an email when Sun sign tea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category